புதுடெல்லியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, குடியரசுத் தலைவர் விருதுச் சான்றிதழ் மற்றும் மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகள் ஆகியவற்றை வழங்கினார்.
பாலி மொழி அறிஞரான Dr.கியானாதித்யா ஷாக்யா, குடியரசுத் தலைவரின் மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் விருதுச் சான்றிதழ்
இவ்விருதானது 60 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு அறிஞர்களின் சிறந்தப் பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
இது 1958 ஆம் ஆண்டு சமஸ்கிருதம், அரபு மற்றும் பாரசீக மொழி அறிஞர்களை கௌரவிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் இது பாலி / பிராகிருதம், செம்மொழிகளான ஒடியா, கன்னடா, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றிற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகள்
இந்த விருதானது சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, பாலி, பிராகிருதம், செம்மொழிகளான ஒடியா, கன்னடா, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கணிசமானப் பங்களிப்பை அளித்தவர்களை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
இவ்விருதானது 2002 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இவ்விருது 30 முதல் 45 வயது வரை உடைய இளம் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
இவ்விரு விருதுகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன.