TNPSC Thervupettagam

மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் 2019

April 8 , 2019 1939 days 591 0
  • புதுடெல்லியில் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, குடியரசுத் தலைவர் விருதுச் சான்றிதழ் மற்றும் மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகள் ஆகியவற்றை வழங்கினார்.
  • பாலி மொழி அறிஞரான Dr.கியானாதித்யா ஷாக்யா, குடியரசுத் தலைவரின் மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குடியரசுத் தலைவர் விருதுச் சான்றிதழ்
  • இவ்விருதானது 60 வயதிற்கு மேற்பட்ட பல்வேறு அறிஞர்களின் சிறந்தப் பங்களிப்பினை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
  • இது 1958 ஆம் ஆண்டு சமஸ்கிருதம், அரபு மற்றும் பாரசீக மொழி அறிஞர்களை கௌரவிக்க அறிமுகப்படுத்தப்பட்டது.
  • பின்னர் இது பாலி / பிராகிருதம், செம்மொழிகளான ஒடியா, கன்னடா, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றிற்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.
மகரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகள்
  • இந்த விருதானது சமஸ்கிருதம், பாரசீகம், அரபு, பாலி, பிராகிருதம், செம்மொழிகளான ஒடியா, கன்னடா, தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் கணிசமானப் பங்களிப்பை அளித்தவர்களை அங்கீகரிப்பதற்காக வழங்கப்படுகிறது.
  • இவ்விருதானது 2002 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இவ்விருது 30 முதல் 45 வயது வரை உடைய இளம் அறிஞர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இவ்விரு விருதுகளும் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்