TNPSC Thervupettagam

மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் நாள்- ஏப்ரல் 24

April 24 , 2019 1985 days 1042 0
  • மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் நாளானது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் நாள் இந்தியாவில் அனுசரிக்கப்படுகின்றது.
  • அரசியலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தின் தேவையைப் பற்றி கவனம் செலுத்தும் யோசனையை கொண்டு வருவதே இதன் நோக்கமாகும்.
  • இந்திய அரசியலமைப்பின் 9-ஆம் அட்டவணையில் 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ம் நாள் கொண்டுவரப்பட்ட 73-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமானது, உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் இடங்களை ஒதுக்கியுள்ளது.
  • புது டெல்லியில் உள்ள சமூக அறிவியல் நிறுவனமானது 1994 ஆம் ஆண்டிலிருந்து ஏப்ரல் 24 ஆம் நாளை பெண்களுக்கு அரசியலில் அதிகாரமளிக்கும் நாளாக அனுசரித்து வருகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்படும் இந்த 25-வது மகளிருக்கு அரசியல் அதிகாரமளிக்கும் தினத்தின் கருத்துருவானது, “பேரழிவு மேலாண்மையில் பஞ்சாயத்துகள்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்