G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக இரண்டு நாட்கள் அளவிலான W20 (மகளிர் 20) தொடக்கக் கூட்டமானது மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒளரங்காபாத்தில் நடைபெற்றது.
2015 ஆம் ஆண்டில் துருக்கிய தலைமைத்துவத்தின் போது நிறுவப்பட்ட W20 என்பது G20 அமைப்பின் கீழான ஓர் அதிகாரப்பூர்வ ஈடுபாட்டுக் குழுவாகும்.
G20 அமைப்பின் விவாதங்களில் பாலினக் கருத்தாய்வுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப் படுவதை உறுதி செய்வதே இதன் முதன்மை நோக்கமாகும்.
W20 இந்தியா குழுவானது 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதியன்று W20 இந்தோனேசியா குழுவிடமிருந்து தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டது.