TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா - அரசு ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஐந்து வேலை நாட்கள்

February 16 , 2020 1657 days 518 0
  • மகாராஷ்டிரா அரசு பிப்ரவரி 29 ஆம் தேதி முதலாக அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாரத்திற்கு ஐந்து வேலை நாட்களை அறிவித்துள்ளது.
  • தற்போது வார இறுதி விடுமுறையைப் பெறுவதற்கு, ஊழியர்கள் திங்கள் முதல் வெள்ளி வரை மேலும் 45 நிமிடங்கள் வேலை செய்வார்கள்.
  • மத்திய அரசைத் தொடர்ந்து வாரத்திற்கு 5 வேலை நாட்கள் என்ற முறையை பின்பற்றும் மாநிலங்கள் ராஜஸ்தான், பீகார், பஞ்சாப், டெல்லி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் ஆகியவையாகும்.
  • இந்த முறையானது தொழிற்சாலைகள் சட்டம் மற்றும் தொழில்துறை தீர்வைச் சட்டத்தின் கீழ் உள்ள அரசு அலுவலகங்களுக்கும் அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படும் நிறுவனங்களுக்கும் பொருந்தாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்