மகாராஷ்டிரா மாநிலமானது தனது நிலப் பதிவுகளை பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவின் (Pradhan Mantri Fasal Bima Yojana - PMFBY) இணைய தளத்துடன் ஒருங்கிணைத்த நாட்டின் முதலாவது மாநிலமாக உருவெடுத்துள்ளது.
நிலப் பதிவுகளை PMFBY உடன் ஒருங்கிணைக்கும் திட்டத்தில் நிலப் பதிவு விவரங்கள் ஆன்லைனில் கிடைப்பதால் நேரத்தை மிச்சப்படுத்தவும் கோப்புகளைப் பிற்சேர்க்கவும் உதவுகின்றது.
PMFBY பற்றி
PMFBY என்பது பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டமாகும்.
இது 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இத்திட்டமானது மத்திய வேளாண் மற்றும் விவசாயி நல அமைச்சகத்தினால் நிர்வகிக்கப்படுகின்றது.
இந்தத் திட்டத்தின் மூலம் காரீப் பயிர்களுக்கு 2% காப்பீட்டுத் தொகையும் ராபி பயிர்களுக்கு 1.5% காப்பீட்டுத் தொகையும் விவசாயிகளால் செலுத்தப்படுகின்றது.
விவசாயிகளால் செலுத்தப்படும் வருடாந்திர வணிக மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கான காப்பீட்டுத் தொகையானது 5% ஆக இருக்கும்.