TNPSC Thervupettagam

மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தினம் – மே 01

May 6 , 2019 1901 days 729 0
  • மே முதல் நாளானது மகாராஷ்டிரா மற்றும் குஜராத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.
  • 1960 ஆம் ஆண்டு பாம்பாய் மறுசீரமைப்புச் சட்டமானது இந்தியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுப் பன்மொழி மாநிலமான பம்பாய் ஆனது குஜராத் மற்றும் மகாராஷ்டிராவாக பிரிக்கப்பட்டது.
  • இந்தச் சட்டமானது மே 01, 1960ல் நடைமுறைக்கு வந்தது.
  • பம்பாய் மாநிலமானது முன்னதாக மராத்தி, குஜராத்தி, கொங்கணி, மற்றும் கட்ச்சி ஆகிய மொழி பேசும் மக்களைக் கொண்டிருந்தது.
  • 1950களின் இடைப்பட்ட பகுதியில் சம்யுக்தா மகாராஷ்டிரா அந்தோலன் என்றழைக்கப்பட்ட இயக்கமானது மராத்தி பேசும் தனி மாநிலத்தைக் கோரியது.
  • அதே சமயம் மகாகுஜராத்தி இயக்கமானது குஜராத்தி பேசும் மக்களுக்கு தனி மாநிலத்தினை உருவாக்கும் நோக்கத்தினைக் கொண்டிருந்தது.
  • இந்த இயக்கங்களானது பம்பாய் மறுசீரமைப்புச் சட்ட உருவாக்கத்தில் முடிவடைந்தது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்