TNPSC Thervupettagam

மகாவீர் ஜெயந்தி

April 18 , 2019 1991 days 530 0
  • மகாவீர் ஜெயந்தி என்பது 24-வது மற்றும் கடைசிச் சமண தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த தினத்தின் நினைவாகும்.
  • கிரிகோரியன் நாட்காட்டியின்படி, இந்நாளானது மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நிகழ்கின்றது. இந்த ஆண்டு இத்தினமானது சமணர்களால் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 அன்று கொண்டாடப்பட்டது.
  • இது சமணர்களின் மிக முக்கியமான மதம் சார்ந்த திருவிழாக்களில் ஒன்றாகும்.
  • மகாவீரர் ஆன்மீக விடுதலைக்கு அகிம்சை (வன்முறையில் ஈடுபடாமை), சத்யம் (உண்மை), அஸ்தேயம் (திருடாமை), பிரம்மச்சரியம் (தூய்மை) மற்றும் அபரிகிரஹம் ஆகிய ஐந்தும் அவசியம் என்று போதித்தார்.
  • இவரது போதனைகள் இந்திரபூதி கௌதமா (தலைமைச் சீடர்) என்பவரால் தொகுக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்