TNPSC Thervupettagam

மக்கக் கூடிய நெகிழிப் பொருட்களுக்கானக் கடன்

August 21 , 2022 699 days 390 0
  • "மக்கக் கூடிய" நெகிழிப் பொருட்களை வணிகமாக்குவதற்காக 1.15 கோடி ரூபாய் தொடக்க நிறுவனக் கடன் ஆனது சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்த நடவடிக்கையானது ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களின் பயன்பாட்டை அகற்ற முயல்கிறது.
  • தொடக்க நிறுவனமானது ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களுக்கு ஒரு மாற்றுத் தீர்வை "மக்கக் கூடிய நெகிழிப் பொருட்களின் முன்மாதிரி" வடிவில் கொண்டு வந்துள்ளது.
  • இந்தப் பொருள் ஆனது மண்ணில் உரம் போன்று சிதைவுறுவதால் இது சுற்றுச்சூழலை பாதிக்காது.
  • இந்தக் கலவையானது வெப்பத்தினால் இழக்கக்கூடிய நெகிழி-ஸ்டார்ச்-கிளிசரின் மற்றும் சில இரசாயன மாற்றங்கள் ஆகியவற்றினைக் கொண்ட தனித்துவம் மிக்க ஒரு கலவையாகும்.
  • மேலும் இது அந்தப் பொருளுக்கு அதிக வலிமையை வழங்குகின்றது.
  • பட்டியலிடப்பட்டு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப் படும் நெகிழிப் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, இருப்பு, விற்பனை, விநியோகம் மற்றும் பயன்பாடு ஆகியவை 2022 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்