TNPSC Thervupettagam

மஞ்சள் சொறி நோய்

February 4 , 2020 1629 days 668 0
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் கோதுமை பயிர்களில் மஞ்சள் சொறி நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
  • மஞ்சள் சொறி நோய் அல்லது பட்டை சொறி நோய் என்பது கோதுமைப் பயிரின் இலைகளின் மீது மஞ்சள் கோடுகளினால் தாக்கப்படும் ஒரு பூஞ்சை நோயாகும்.
  • இது அவற்றின் ஒளிச்சேர்க்கையைப் பாதிக்கின்றது. இது தானியத்தின் அளவைக் குறைக்கின்றது.
  • மழை, பனி மற்றும் மூடுபனி ஆகியவை இந்த நோயின் வளர்ச்சியை ஆதரிக்கின்றன.
  • கடந்த ஆண்டு, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தால் எச்டி - 3266 அல்லது பூசா யஷஸ்வி என்ற ஒரு புதிய வகைக் கோதுமையானது வெளியிடப்பட்டது.
  • இது மஞ்சள் / பட்டை, பழுப்பு / இலை மற்றும் கருப்பு / தண்டு போன்ற பெரிய சொறி நோய் சார்ந்த பூஞ்சைகளுக்கு எதிராக அதிக அளவு எதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்