TNPSC Thervupettagam

மணிப்பூரில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அனைத்து மகளிர் குழு நியமனம்

August 14 , 2023 343 days 191 0
  • இந்திய தலைமை நீதிபதி, D.Y. சந்திரசூட் அவர்கள், மணிப்பூரில் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக உயர் நீதிமன்றத்தின் மூன்று முன்னாள் நீதிபதிகளைக் கொண்ட அனைத்து மகளிர் குழுவை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
  • நீதிபதி கீதா மிட்டல் தலைமையிலான இந்தக் குழுவில் உயர் நீதிமன்றத்தின் மூன்று முன்னாள் நீதிபதிகள் இடம் பெறுவர்.
  • பரந்தக் கொள்கை அடிப்படையிலான இந்தக் குழுவின் மற்ற உறுப்பினர்கள் மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான நீதிபதி ஷாலினி பன்சால்கர் ஜோஷி மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான நீதிபதி ஆஷா மேனன் ஆகியோர் ஆவர்.
  • ஆறு வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறை தலைமை இயக்குநர்கள் இந்த வழக்குகளுக்காக என்று உருவாக்கப்பட்ட இந்தச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை மேற்பார்வையிடுவதற்காக தலா ஆறு துணைத் தலைமைக் காவல் ஆய்வாளர் நிலை அதிகாரிகளை நியமிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்