மது பாபு ஓய்வூதியத் திட்டத்தின் (Madhu Babu Pension Yojana-MBPY) கீழ் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தில் மாதத்திற்கு 200 ரூபாய் உயர்வை ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
அம்மாநில அரசானது வயதானோருக்கான ஓய்வூதியம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை இணைத்து ஒரே திட்டமாக 2008 ஜனவரி 01 அன்று மது பாபு ஓய்வூதியத் திட்டத்தினை தொடங்கியது.
ஆதரவற்ற வயோதிகர்களுக்கும் ஆதரவற்ற மாற்றுத் திறனாளிகளுக்கும் நிதியுதவி அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.