TNPSC Thervupettagam

மதுபானக் கடைகள் மூடல்

April 15 , 2023 463 days 202 0
  • தமிழ்நாடு அரசானது, இந்த ஆண்டில் தமிழ்நாடு மாநில அரசுச் சந்தைப்படுத்துதல் கழகம் (டாஸ்மாக்) நடத்தும் 500 சில்லறை விற்பனைக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளது.
  • அடையாளம் காணப்பட்டு மூடப்பட உள்ள இந்த 500 கடைகள், டாஸ்மாக் நடத்தும் 5,329 சில்லறை விற்பனைக் கடைகளில் 10 சதவீதம் ஆகும்.
  • இவ்வளவு அதிக எண்ணிக்கையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது இது மூன்றாவது முறையாகும்.
  • மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த போது 500 கடைகளை மூடுவதாக அறிவித்தார்.
  • எடப்பாடி K.பழனிசாமி அவர்கள், 2017 ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்ற போது மேலும் 500 கடைகளை மூடுவதாக அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்