TNPSC Thervupettagam

மத்திய ஆயுதக் காவல் படை தினம் – ஜூலை 27

July 28 , 2019 1890 days 610 0
  • இந்தியாவில் மிகப்பெரிய துணை இராணுவப் படையான மத்திய ஆயுதக் காவல் படையின் (CRPF - Central Reserve Police Force) 81-வது எழுச்சி தினம் 2019 ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று அனுசரிக்கப்பட்டது.
  • 1939 ஆம் ஆண்டு இத்தினத்தில் CRPF ஆனது தலைமைப் பிரதிநிதிகளின் காவற் படையாக உருவாகியது.
  • இது 1949 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி CRPF சட்டம் இயற்றப்பட்டதற்குப் பின்பு தற்பொழுதைய பெயரான CRPF என்று அதற்கு பெயர் மாற்றப்பட்டது.
  • இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.
  • இது பின்வருவனவற்றை எதிர்கொள்வதில் முதன்மைப் படையாகச் செயல்படுகின்றது.
    • ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதம்
    • நக்சலைட்டுகளை எதிர்த்துப் போராடுதல்
    • வடகிழக்கு இந்தியாவில் நிகழும் கிளர்ச்சி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்