TNPSC Thervupettagam

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கை

July 14 , 2018 2201 days 619 0
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் 2017-2018ஆம் ஆண்டு அறிக்கையின்படி 2016ஆம் ஆண்டில் 54,723 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக4 சதவீதம் மட்டுமே வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
  • 2015ஆம் ஆண்டில் 41,893 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2014ஆம் ஆண்டில் 37,854 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையில், நாட்டில் 2016ஆம் ஆண்டில் 8,132 ஆள்கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2016ஆம் ஆண்டில் குழந்தைக் கடத்தல் வழக்குகளில்7 சதவீதம் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டிற்கான விபரம் இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி 2016ஆம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்காக 1,06,958 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • 2015ஆம் ஆண்டில் 94,172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு6 சதவீதம் குற்றங்கள் அதிகரித்திருப்பது தெளிவாகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்