TNPSC Thervupettagam
August 6 , 2022 717 days 474 0
  • ஊழல் தடுப்பு ஆணையர், சுரேஷ் N. படேல் மத்திய ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கப் பட்டுள்ளார்.
  • சஞ்சய் கோத்தாரி என்பவருக்குப் பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய ஊழல் தடுப்பு ஆணையமானது ஒரு மத்திய ஊழல் தடுப்பு ஆணையர் மற்றும் இரண்டு ஊழல் தடுப்பு ஆணையர்களைக் கொண்டு செயல்படுகிறது.
  • தற்போது ஆணையத்தில் ஊழல் தடுப்பு ஆணையர் எவரும் இல்லை.
  • பிரதமர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட ஒரு தேர்வுக் குழுவானது இவர்களை நியமிக்கிறது.
  • இந்தக் குழுவில் உள்ள மற்ற இரு உறுப்பினர்கள் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்