TNPSC Thervupettagam

மத்திய தத்தெடுத்தல் வள ஆணைய தினம் - ஜனவரி 15

January 18 , 2020 1716 days 435 0
  • மத்திய தத்தெடுத்தல் வள ஆணையமானது (Central Adoption Resource Authority - CARA) தனது 5வது வருடாந்திர தினத்தைப் புது தில்லியில் கொண்டாடியது.
  • CARA என்பது உள்நாட்டுக் குழந்தைகள் தத்தெடுத்தலை ஊக்குவித்து அதனை மேற்பார்வையிடும் இந்திய அரசின் ஒரு உச்ச அமைப்பாகும்.
  • இது நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்பை ஒழுங்குபடுத்துவதற்காக நியமிக்கப் பட்ட ஒரு மத்திய ஆணையமாகச் செயல்படுகின்றது.

  • 1993 ஆம் ஆண்டின் நாடுகளுக்கிடையேயான தத்தெடுப்புகள் குறித்த தி ஹேக் ஒப்பந்தமானது இந்திய அரசால் 2003 ஆம் ஆண்டில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015ன் விதிகளின் கீழ், 2016 ஆம் ஆண்டு ஜனவரி 15 அன்று CARA ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவிக்கப் பட்டது.
  • இது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்