TNPSC Thervupettagam

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவர்

November 30 , 2018 2106 days 638 0
  • மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் தலைவராக அர்விந்த் சக்ஸேனாவை குடியரசுத் தலைவர் நியமனம் செய்தார்.
  • இவர் தனது 65வது வயதை அடையும் வருடமான ஆகஸ்ட் 7, 2020 வரை அப்பதவியை வகிப்பார்.
  • ஐ.ஏ.எஸ், ஐ.எப்.எஸ், மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக புகழ்பெற்ற குடிமைப் பணி தேர்வினை நடத்தும் இது ஒரு அரசியல் சாசன அமைப்பாகும்.
  • இது அரசியலமைப்பின் 315வது விதியின் கீழ் நிறுவப்பட்டுள்ளது. இது குடியரசுத் தலைவரால் நியமனம் மற்றும் நீக்கம் போன்றவை செய்யப்படக் கூடிய ஒரு தலைவர் மற்றும் பத்து உறுப்பினர்களைக் கொண்டது ஆகும்.
  • இதன் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயதினை அடையும் காலம் வரை பதவி வகிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்