4 முறை கோவாவின் முதல்வராகவும் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த மனோகர் பாரிக்கர் மார்ச் 17 அன்று காலமானார்.
இவர் பிரதமரின் அழைப்பின் பேரில் 2014-17 காலகட்டத்தில் முதல்வர் பதவியை விட்டு விலகி பாதுகாப்புத் துறை அமைச்சராக பணியாற்றினார்.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT மும்பை) முன்னாள் மாணவராக ஒரு இந்திய மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் கோவாவின் முதல்வராகவும் (2000 ஆம் ஆண்டில்) பதவி வகித்த முதல் இந்தியர் இவராவார்.
இவர் 4 முறை முதல்வராக பதவியேற்ற போதிலும் ஒருமுறை கூட தனது முழு பதவிக் காலத்திற்குப் பணியாற்றி முடிக்க முடியவில்லை.