இந்தியப் பெருங்கடலில் பெருங்கடலியலுக்கான தேசிய நிறுவனம் தனது இத்தகைய முதல் வகை திட்டமான மரபணு வரைபடமிடல் திட்டத்தினைத் தொடங்க உள்ளது.
இதன் முக்கிய நோக்கம் இந்தியப் பெருங்கடலில் உள்ள நுண்ணுயிரிகளின் மரபணு படங்களின் மாதிரிகளைச் சேகரித்தலாகும்.
அது மட்டுமின்றி, காலநிலை மாற்றம், ஊட்டச் சத்திற்கான நெருக்கடி, அதிகரிக்கும் மாசுபாடு போன்றவற்றில் இந்தியப் பெருங்கடலின் எதிர்வினை மற்றும் அதன் உயிரி வேதியியல் பற்றி புரிந்து கொள்வதும் இன்றியமையாத ஒன்றாகும்.
இதன் நன்மைகள் பின்வருமாறு
இது சூழலியல் அமைப்புகளைப் புரிந்து கொள்ள உதவும்
இது காலநிலை மாற்றங்களை ஏற்படுத்தும் காரணிகளைப் புரிந்து கொள்ள உதவும்.
இது இந்தியப் பெருங்கடலின் கனிம வளங்கள் பற்றி அறிய உதவும்.
மொத்த புவிப்பரப்பில் இந்தியப் பெருங்கடல் 20% பரப்பளவைக் கொண்டுள்ளது.