TNPSC Thervupettagam

மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை, 2013

March 26 , 2020 1579 days 514 0
  • மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையானது (2013) ஆண்டுக்கு ரூபாய் 12,447 கோடி ரூபாய்  பணத்தைச் சேமிக்க உதவியுள்ளது.
  • மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணை என்பது இந்திய அரசாங்கத்தால் அத்தியாவசிய பொருட்கள் சட்டம், 1955 என்ற சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ஒரு உத்தரவாகும்.
  • இந்த உத்தரவானது மருந்துகளின் விலையை நிர்ணயிப்பதற்கான விவரங்கள், விலையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கான நடைமுறைகள், ஆணையை மீறினால் செலுத்த வேண்டிய அபராதம் முதலிய தகவல்களை வழங்குகிறது.
  • இந்த உத்தரவானது மருந்துகளின் அதிகபட்ச விலையை நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்திற்கு அதிகாரம் அளித்துள்ளது.
  • தேசிய அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள மருந்துகளின் விலைகளை மட்டுமே நிர்ணயிக்க தேசிய மருந்து விலை ஆணையத்திற்கு அனுமதி உள்ளது.
  • இந்த பட்டியலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2011 ஆம் ஆண்டில் தயாரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்