மருந்துக் கண்டுபிடிப்பு ஹேக்கத்தான் – 2020 என்ற ஒரு தேசிய அளவிலான முன்னெடுப்பானது தொடங்கப் பட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பானது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் மற்றும் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் ஆகியோரால் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஹேக்கத்தானின் குறிக்கோள் கணக்கீட்டு முறையின் மூலம் கோவிட் – 19 வைரசிற்கான மருந்துப் பொருட்களைக் கண்டறிவதாகும்.