இது உலகம் முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைக் கௌரவிப்பதற்காக வேண்டி மலாலா யூசப்சாயின் பிறந்த தினத்தன்று அனுசரிக்கப் படுகின்றது.
இவர் 1997 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிறந்தார்.
2012 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், மலாலா தாலிபான் தீவிரவாதிகளினால் சுடப்பட்டு, கடினமான சூழ்நிலையில் இருந்தார்.
2012 ஆம் ஆண்டு, இவருக்கு முதன்முறையாக பாகிஸ்தான் அரசினால் தேசிய இளைஞர் அமைதி விருதானது வழங்கப்பட்டது.
2014 ஆம் ஆண்டில் குழந்தைகளின் உரிமைகளுக்காக இவர் ஆற்றிய முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக மிகவும் இளம் வளதில் நோபல் பரிசை வென்ற முதலாவது நபராக மலாலா உருவெடுத்தார். அப்போது இவருக்கு வயது 17.
ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது 2019 ஆம் ஆண்டின் மதிப்பீட்டு அறிக்கையில் கடந்த பத்தாண்டுகளில் இவரை “உலகின் மிகவும் புகழ்பெற்ற இளம் வயதுப் பெண்மணி” என்று அறிவித்துள்ளது.