TNPSC Thervupettagam

மாஞ்சா நூல்களுக்குத் தடை

November 4 , 2023 259 days 214 0
  • ‘மாஞ்சா நூல்கள்’ என்று பிரபலமாக அழைக்கப்படும் பட்டங்களைப் பறக்க விட பயன்படுத்தப் படும் கண்ணாடித் துகள் பூசப்பட்ட நூல்களின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு மற்றும் பயன்பாடு ஆகியவற்றிற்குத் தமிழக அரசு முழுத் தடை விதித்து உள்ளது.
  • இது நைலான், நெகிழி அல்லது வேறு ஏதேனும் செயற்கைப் பொருட்களால் செய்யப் பட்டதாக இருக்கலாம்.
  • இதற்கான ஆணையானது 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் தேதியன்று அரசினால் வெளியிடப்பட்டு, அக்டோபர் 30 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசிதழிலும் அறிவிக்கப் பட்டது.
  • இந்தத் தடையை மீறுபவர்கள் மீது 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் (மத்தியச் சட்டத்தின் 29வது பிரிவு, 1986) விதிகளின் கீழ் சட்டரீதியான ஒரு நடவடிக்கை எடுக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்