TNPSC Thervupettagam

மாதாந்திர உதவித்தொகை திட்டம் - ராஜஸ்தான்

February 6 , 2019 1992 days 602 0
  • ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் மார்ச் 1ம் தேதி முதல் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கான மாதாந்திர உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.
  • இந்த உதவித் தொகையைப் பெற இளைஞர்களுக்கான நிபந்தனை குடும்ப வருமானம் வருடத்திற்கு 2 லட்சத்திற்குக் குறைவாக இருக்க வேண்டும்.
  • தற்சமயம் ராஜஸ்தான் “வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கான உதவித் தொகைத் திட்டம் 2012” என்ற திட்டத்தில் அரசிடமிருந்து இளைஞர்களும் பெண்களும் முறையே 750 மற்றும் 650 ரூபாய் என்ற அளவில் மாதத்திற்கு வேலை வாய்ப்பு உதவித் தொகையைப் பெறுகின்றனர்.

மாதாந்திர உதவித் தொகைத் திட்டங்கள் பிற மாநிலங்களில்

  • தற்சமயம் மேற்கு வங்காளம் மூடப்பட்ட தொழிற்சாலைப் பணியாளர்களுக்கு ஒன்றும் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு ஒன்றும் என இரு திட்டங்களைக் கொண்டிருக்கின்றது. இரு திட்டங்களிலும் மாதத்திற்கு உதவித் தொகை 1500 ரூபாய் முதல் 2000 வரையாகும்.
  • பஞ்சாபில் இந்த உதவித்தொகை 150 ரூபாய் முதல் 600 வரை வரம்பில் இருக்கின்றது.
  • அரியானா பட்டதாரிகளுக்கும் முதுநிலைப் பட்டதாரிகளுக்கும் 1500 ரூபாயையும் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு 900 ரூபாயையும் அளிக்கின்றது.
  • கேரளாவில் இந்த உதவித் தொகை மாதத்திற்கு 120 ரூபாயாகும்.
  • தமிழ்நாடு பத்தாம் வகுப்பு முடித்த இளைஞர்களுக்கு மாதத்திற்கு 600 ரூபாயையும் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு 750 ரூபாயையும் பட்டதாரிகளுக்கு 1000 ரூபாயையும் வழங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்