உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பகதூர்பூர் மற்றும் கெரி விரான் ஆகிய இரண்டு கிராமங்களும் இந்தியாவின் முதலாவது மாதிரி விளையாட்டுக் கிராமங்களாக உருவெடுத்துள்ளன.
இது நாட்டில் விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக காசியாபாத்தில் உள்ள மேலாண்மைத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் செயல்படுத்தப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.