மலையாள நாளிதழான மாத்ருபூமியின் நூற்றாண்டு விழாவின் முழு ஆண்டு அளவிலானக் கொண்டாட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
1923 ஆம் ஆண்டு மார்ச் 18 ஆம் தேதியன்று மாத்ருபூமி நாளிதழ் நிறுவனம் இயங்கத் தொடங்கியது.
இது சமூகச் சீர்திருத்தங்கள் மற்றும் மேம்பாட்டுச் செயல் நிரல்களைக் கடந்து, தேசிய நலன் சார்ந்த பிரச்சினைகளைத் தொடர்ந்து முன்னிலைப்படுத்தச் செய்வதில் முன்னணியில் உள்ளது.