TNPSC Thervupettagam

மாநில அரசுகளின் கல்விக்கான நிதி ஒதுக்கீடு

February 16 , 2023 518 days 280 0
  • இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில், சத்தீஸ்கர் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் 2023 ஆம் நிதியாண்டிற்கான தங்களது நிதிநிலை அறிக்கையில் கல்விக்காக அதிகளவு விகிதத்தை ஒதுக்கியுள்ளன.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் மதிப்பிடப்பட்ட நிகர நிதிநிலைச் செலவினத்தில் 18.82 சதவீதத்தை கல்விக்காக அம்மாநிலம் ஒதுக்கியுள்ள நிலையில், பீகார் மாநில அரசானது 18.3 சதவீதத்தை ஒதுக்கியுள்ளது.
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் கல்வியறிவு விகிதம் 77.9 சதவீதமாக உள்ள அதே சமயம் பீகார் மாநிலத்தின் கல்வியறிவு விகிதமானது நாட்டிலேயே மிகக் குறைவான அளவு கல்வியறிவு விகிதமாக 70.9 சதவீதமாக உள்ளது.
  • டெல்லி, அசாம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தங்களது நிதிநிலை செலவினத்தில் அதிகப் பகுதியை கல்விக்காக செலவிட்ட மாநிலங்களாகும்.
  • அவை முறையே 22 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 19 சதவீதம் அளவில் நிதி ஒதுக்கீடு செய்துள்ளன.
  • கேரள மாநிலமானது 96.2 சதவீத கல்வியறிவு வீதத்துடன் நாட்டிலேயே அதிக கல்வியறிவு வீதம் கொண்ட மாநிலமாக உள்ள அதே சமயம் தமிழ்நாடு மாநிலத்தின் கல்வியறிவு வீதமானது 82.9 சதவீதமாக உள்ளது.
  • 2023 ஆம் நிதியாண்டிற்கான நிகர நிதிநிலைச் செலவினத்தில் கல்விக்கான ஒதுக்கீட்டின் தேசிய சராசரி 15.4 சதவீதமாக இருந்தது.
  • கல்விக்கான தங்களது நிகர செலவினத்தில் ஒப்பீட்டளவில் சிறிய விகிதத்தை ஒதுக்கி உள்ள மற்ற மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசம் (12.7 %), கர்நாடகா (12.73 %), உத்தரப் பிரதேசம் (12.89 %), மற்றும் பஞ்சாப் (13.05 %) ஆகியவை அடங்கும்.
  • ஒட்டு மொத்த மதிப்பீடுகளானது, தமிழ்நாடு மாநிலத்தில் ஏற்கனவே கல்வியறிவு விகிதங்கள் அதிகமாக இருந்தாலும் அதன் கல்வியறிவு விகிதத்தை மேலும் அதிகரிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறுகிறது.
  • மத்திய அரசானது கல்விக்காக மொத்த நிதிநிலையில் 16.51% என்ற அளவில்  ரூ.44,094 கோடியை ஒதுக்கியுள்ளது.
  • இது முந்தைய ஆண்டை விட 8% அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்