பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான பஞ்சாப் மாநில அமைச்சரவையானது, இடஒதுக்கீடு இல்லாத வகுப்பினருக்காக "மாநில பொதுப்பிரிவு ஆணையத்தை" அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆணையமானது இட ஒதுக்கீட்டினைப் பெறாத வகுப்பினரின் நலன்களைப் பாதுகாப்பதோடு, அவர்களுக்கான பல்வேறு அரசு நலத் திட்டங்களைத் திறம்படச் செயல்படுத்தவும் உதவும்.
இட ஒதுக்கீடு இல்லாத வகுப்பைச் சேர்ந்த ஏழைகளின் நலனுக்காகவே வேண்டி இந்த ஆணையம் செயல்படும்.
பஞ்சாப் தவிர, இமாச்சலப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களும் "மாநில பொதுப் பிரிவு ஆணையத்தை" அமைத்துள்ளன.