மத்திய குடிமைப் பணிகள் ஆணையமானது (UPSC) கடந்த மாதம் திருத்தியமைக்கப் பட்டுள்ள வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஒய்வு பெறுவதற்கு முன் குறைந்தபட்சம் ஆறுமாதப் பணிக் காலம் எஞ்சியிருக்கும் காவல்துறை அதிகாரிகள் மட்டுமே ஒரு மாநிலத்தின் காவல்துறை தலைமை இயக்குநராக நியமிக்கப் படுவதற்கு பரிசீலிக்கப் படுவார்கள்.
மாநில அரசுகள், ஓய்வு பெறவுள்ள காவல்துறை அதிகாரிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் முயற்சியில், "தனது தனிச் சலுகைக்குரிய அதிகாரிகளை" அப்பதவியில் நியமிப்பதைத் தடுப்பதற்காக இந்த வழிகாட்டுதல்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
சில மாநில அரசுகள் ஆனது, தொடர்ந்து முழுநேர காவல்துறை தலைமை இயக்குநர்களுக்குப் பதிலாக, தற்காலிகக் காவல்துறைத் தலைமை இயக்குநர்களை நியமித்து, மத்தியக் குடிமைப் பணிகள் ஆணையத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தகுதியான காவல்துறை அதிகாரிகளின் பெயர் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கும் அவசியத்தினைத் தவிர்க்கின்றன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2022 ஆம் ஆண்டு முதல் முழுநேர அளவில் காவல்துறை தலைமை இயக்குநர்கள் இல்லை.
பிரகாஷ் சிங் என்றும் அறியப் படுகின்ற, 2006 ஆம் ஆண்டு காவல்துறை சீர்திருத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பிற்குப் பிறகு, 2009 ஆம் ஆண்டில் மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர் பதவிக்கு நியமனம் செய்வதற்கான பெயர் பட்டியலைத் தயாரிப்பதற்கான வழி காட்டுதல்களை மத்தியக் குடிமைப் பணிகள் ஆணையமானது முதன் முதலில் உருவாக்கியது.