TNPSC Thervupettagam

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்

August 10 , 2018 2174 days 824 0
  • தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான ஹரிவம்ச நாராயண சிங் மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 125 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.
  • காங்கிரசைச் சேர்ந்த எதிரணி வேட்பாளரான K.ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார்.
  • சிங் முன்னாள் பத்திரிக்கையாளரும், பீகாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவரும் ஆவார்.
  • துணைத் தலைவருக்கான பதவி கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரான P.J.குரியனின் ஓய்வைத் தொடர்ந்து 2018ம் ஆண்டு ஜூன் முதல் காலியாக இருந்தது.
  • தற்போதைய மாநிலங்களவையின் மொத்த உறுப்பினர்கள் 244. முழு அவையில் வெற்றி பெற 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
  • பாஜக 73 உறுப்பினர்களைக் கொண்டுள்ள அவையின் மிகப்பெரிய கட்சியாகும். 50 உறுப்பினர்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் மிகப்பெரிய எதிர்க் கட்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்