TNPSC Thervupettagam

மாநிலப் புலிகள் பாதுகாப்புப் படை - தெலுங்கானா

January 28 , 2019 2000 days 601 0
  • மாநிலத்தில் புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காக மாநில புலிகள் பாதுகாப்புப் படையை (State Tiger Protection Force) உருவாக்க தெலுங்கானா மாநில அரசு முடிவு செய்துள்ளது.
  • தலைமைச் செயலாளர் எஸ்.கே. ஜோஷி தலைமையிலான மாநில வனப் பாதுகாப்புக் குழுவானது மாநில புலிகள் பாதுகாப்புப் படையை உருவாக்கும் முடிவை எடுத்துள்ளது.
  • அமராபாத் மற்றும் காவல் புலிகள் காப்பகத்தில் உள்ள புலிகளின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்காக துணைப் பாதுகாவலர் தலைமையில் 112 நபர்கள் கொண்ட மாநில புலிகள் பாதுகாப்புப் படை செயல்படும்.
  • இந்தப் படைக்கான செலவை மாநில மற்றும் மத்திய அரசுகள் 40 : 60 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்