TNPSC Thervupettagam

மானேசர் பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி 2022

October 15 , 2022 646 days 333 0
  • இந்தியா தற்போது ‘மானேசர் பயங்கரவாத எதிர்ப்பு 2022’ என்ற பலதரப்பு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சியை நடத்தி வருகிறது.
  • இது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் (RATS) கட்டமைப்பின் கீழ் நடத்தப்படுகிறது.
  • பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (RATS) ஆனது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நிரந்தர உறுப்புகளில் ஒன்றாகும்.
  • உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் அதன் தலைமையகம் அமைந்துள்ளது.
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் நோக்கம் பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதாகும்.
  • 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பின் தலைமைப் பதவியை இந்தியா ஏற்றுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்