தங்க நகரத்தின் மாரு மகோத்சவ் எனவும் அழைக்கப்படும் புகழ்பெற்ற ஜெய்சால்மர் பாலைவனத் திருவிழாவானது இராஜஸ்தானின் ஜெய்சால்மரிலுள்ள பொக்ரான் கிராமத்தில் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 முதல் 16 வரை கொண்டாடப்பட்டது.
வண்ணமயமான பிரம்மாண்ட அணிவகுப்புடன் தொடங்கப்பட்ட இந்த விழாவில் பொக்ரான் அழகி மற்றும் பொக்ரான் ஆணழகன் போட்டிகள் நடத்தப்பட்டன.
இது 4 நாள்கள் நடைபெறும் ஒரு வருடாந்திரத் திருவிழாவாகும்.
வட்டார நாட்டுப்புற நடனங்களான கல்பேலியா, கச்சி கோடி, கைர் (Kalbelia, Kachhi Ghodi, Gair) போன்றவையும் இதில் நிகழ்த்தப்பட்டன.