TNPSC Thervupettagam

மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை

July 21 , 2021 1130 days 525 0
  • அண்டை மாநிலமான கர்நாடகாவில் யார்கோல் என்னுமிடத்தில், மார்க்கண்டேய நதியின் குறுக்கே கட்டப்படும் அணையானது மிகுந்த எதிர்பார்ப்புடன் எதிர்நோக்கப் படும் தென்பெண்ணை – பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டத்தின் மீது மிகுந்த எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
  • கர்நாடகாவானது யார்கோல் அணையில் நீரைத் தடுத்துச் சேமித்தால் பெண்ணை ஆற்றிற்கு வரும் நீர்வரத்து குறையும்.
  • இதனால் பருவ மழைக்காலத்தின் போது ஏராளமான நீரைப் பெறும் கிருஷ்ணகிரி அணைக்கு வரும் நீர்வரத்து குறைக்கப்படும்.
  • இது வட தமிழகத்தின் வடிநிலப் பகுதிகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பு

  • தென்பெண்ணை – பாலாறு நதிநீர் இணைப்புத் திட்டம் மூலமாக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடியில் பாயும் பாலாற்றிற்கு தென்பெண்ணை ஆற்றிலிருந்து 3 டிஎம்சி அளவு நீரானது கொண்டு வரத் திட்டமிடப் பட்டுள்ளது.
  • இந்தத் திட்டத்தின் மூலம் வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்