இந்தியப் பிரதமரான நரேந்திர மோடி மற்றும் மாலத் தீவின் அதிபரான இப்ராஹிம் மொகமத் சோலிஹ் ஆகியோர் கூட்டாக மாலத்தீவில் 4 முக்கிய வளர்ச்சித் திட்டங்களை காணொளி மூலம் திறந்து வைத்தனர்.
இந்த 4 திட்டங்கள் பின்வருமாறு:
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கடலோர காவல்படைக் கப்பலான காமியாப்பை மாலத் தீவிற்கு பரிசளித்தல்,
ரூபே அட்டையைத் தொடங்கி வைத்தல்,
இருமுனைய ஒளி-உமிழ் (light-emitting diode - LED) விளக்குகளைப் பயன்படுத்தி மாலே நகரை ஒளிரூட்டல் மற்றும்
மீன் பதப்படுத்தும் 3 தொழிற்சாலைகளைத் தொடங்கி வைத்தல்.