பிரபல இந்தியப் பொருளாதார நிபுணரும் அரசியல் விமர்சகருமான பிரபாத் பட்நாயக், 2022 ஆம் ஆண்டிற்கான மால்கம் ஆதிசேஷய்யா என்ற விருதுக்குத் தேர்ந்து எடுக்கப் பட்டு உள்ளார்.
இவ்விருது ஆண்டுதோறும் மால்கம் மற்றும் எலிசபெத் ஆதிசேஷய்யா என்ற ஒரு அறக் கட்டளையால் வழங்கப்படுகிறது.
இது ஒரு சிறந்த சமூக அறிவியலாளருக்கு வழங்கப்படுகிறது.
இந்த விருதில் சான்றிதழும், ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுத் தொகையும் அடங்கும்.