சத்தீஸ்கர் மாநிலமானது மார்ச் மாதத்தில் குறைவான வேலைவாய்ப்பின்மை வீதத்துடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
இந்தியப் பொருளாதார அமைப்புகளை கண்காணிக்கும் மையத்தினால் சமீபத்தில் வெளியிடப் பட்ட வேலைவாய்ப்பின்மை அறிக்கையில் இத்தகவலானது கூறப்பட்டு உள்ளது.
சத்தீஸ்கரில் வேலைவாய்ப்பின்மை வீதம் ஆனது இதுவரையில் இல்லாத அளவில் குறைவான நிலையை (0.6%) எட்டியுள்ளது.
இந்திய நாட்டின் வேலைவாய்ப்பின்மை வீதம் 7.5% ஆகும்.
இதில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 8.5% மற்றும் கிராமப்புற வேலை வாய்ப்பின்மை 7.1% ஆகும்.
குறிப்பு
கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையிலான ஒரு பொருளாதார இணைப்பினை அதிகரிப்பதை வலியுறுத்தும் நோக்கில், உள்ளார்ந்த வளர்ச்சி என்ற ஒரு இலக்கினை நிறுவும் நடவடிக்கையில், மகாத்மா காந்தியின் ‘கிராம் சுவராஜ்’ என்ற நோக்கத்திற்கு இணங்க 3 ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் அரசு ஒரு புதிய மாதிரியை நடைமுறைப் படுத்தியது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்து வரும் 5 ஆண்டுகளில் 12 முதல் 15 லட்சம் வரையிலான புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் ரோஸ்கர் (வேலைவாய்ப்பு) என்ற ஒரு திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.