TNPSC Thervupettagam

மிக்சாங் புயல்

December 6 , 2023 226 days 319 0
  • இதற்கு மியான்மர் நாட்டினால் பெயரிடப் பட்டது.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் மிக்சாங் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் வரை ‘வெப்ப மண்டலப் புயலாக’ (காற்றின் வேகம் மணிக்கு 62 கி.மீ. முதல் 87 கி.மீ. வரை) இருக்கும் என்று ஆரம்பத்தில் கணித்திருந்தது.
  • ஆனால் பின்னர், அது ஒரு ‘தீவிர‘ புயலின் தீவிரத்தினைக் கொண்டிருக்கும் என்று கணித்தது (காற்றின் வேகம் மணிக்கு 88 கி.மீ. முதல் 166 கி.மீ. வரை).
  • இது பாபட்லா என்னுமிடத்திற்கு அருகில் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையைக் கடந்து சென்றது.
  • இப்பகுதி ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு இடையே உள்ளது.
  • ஆந்திரக் கடற்கரையை கடந்த பிறகு, இந்த புயல் தொடர்ந்து வடமேற்கு திசையில் தெற்கு ஒடிசாவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்திய வானிலை ஆய்வு மையம் ஆனது அப்பகுதியில் ‘ஆரஞ்சு’ நிற எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது
  • தட்பவெப்பவியல் ரீதியாக, வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடலை உள்ளடக்கிய வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஐந்து புயல்கள் உருவாகின்றன.
  • இவற்றில் சராசரியாக நான்கு புயல்கள் வங்காள விரிகுடாவிலும், ஒன்று அரபிக் கடலிலும் உருவாகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்