மிசோரம் அரசானது பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகளை அங்கீகரித்தல்) சட்டம், 2006 (வன உரிமைகள் சட்டம்) என்ற சட்டத்தை ரத்து செய்துள்ளது.
இந்திய அரசியலமைப்பின் 371 (ஜி) பிரிவின் கீழ் அம்மாநில அரசு அனுபவித்து வரும் சிறப்பு அங்கீகாரத்தை இச்சட்டம் மீறியுள்ளது என்ற அடிப்படையில் இச்சட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது.
பிரிவு 371 (ஜி)ன் கீழ், நில உடைமை மற்றும் இடமாற்றம் தொடர்பான நாடாளுமன்றத்தின் அனைத்துச் சட்டங்களும் மாநிலத்தில் செயல்படுத்தப் படுவதற்கு முன்னர் முதலில் ஒரு தீர்மானத்தின் மூலம் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும்.
வன உரிமைகள் சட்டம், 2006 என்பதை ரத்து செய்வதன் மூலம், மிசோரமில் உள்ள வன நிலங்களை அதற்குச் சொந்தமான பாரம்பரிய சமூகங்கள் மற்றும் மாநில வனத் துறை ஆகியவை தமது கட்டுக்குள் வைத்திருக்கும்.