TNPSC Thervupettagam

மிசோரம் மாநில தினம் - பிப்ரவரி 20

February 24 , 2024 147 days 142 0
  • சுதந்திரத்தின் போது மிசோ மலைக்குன்றுகள் பகுதி ஆனது அசாம் மாநிலத்தின் லுஷாய் மலைப்பாங்கு மாவட்டமாக மாறியது.
  • மேலும், 1954 ஆம் ஆண்டில் இது அசாம் மாநிலத்தின் மிசோ மலைக்குன்றுகள் மாவட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
  • மிசோ தேசிய முன்னணி (MNF) அமைப்பின் மிதவாதிகளுடன் ஓர் ஒப்பந்தம் கையெழுத்துதானதை அடுத்து 1972 ஆம் ஆண்டில் மிசோரத்திற்கு ஒன்றியப் பிரதேச அந்தஸ்து வழங்கப்பட்டது.
  • மத்திய அரசிற்கும் MNF அமைப்பிற்கும் இடையே மிசோரம் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து 1986 ஆம் ஆண்டில் மிசோரம் ஒன்றியப் பிரதேசம் முழு மாநில அந்தஸ்து பெற்றது.
  • 1986 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 53வது சட்டத் திருத்தத்திற்குப் பிறகு 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20 ஆம் தேதியன்று மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது.
  • மிசோரம் ஆனது, அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் (பிரிவு 244(2)) "பழங்குடியினர் பகுதி" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்