மிசோ ஹில்ஸ் பகுதியானது சுதந்திரத்தின் போது அசாமுக்குள் லுஷாய் ஹில்ஸ் என்ற மாவட்டமாக மாறியது.
மேலும், 1954 ஆம் ஆண்டில், இது அசாமின் மிசோ ஹில்ஸ் மாவட்டமாக மறுபெயரிடப் பட்டது.
மிசோ தேசிய முன்னணியின் மிதவாதிகளுடன் ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, மத்திய அரசு 1972 ஆம் ஆண்டில் ஒன்றியப் பிரதேசத்தின் அந்தஸ்துடன் மிசோரத்தை நிறுவியது.
மிசோரம் மாநிலச் சட்டம் 1986 என்ற சட்டத்தின் படி மிசோரமுக்கு மாநில அந்தஸ்து வழங்கப் பட்டது.
மிசோரம் மாநிலம் முறைப்படுத்தப் பட்டு 1987 ஆம் ஆண்டு பிப்ரவரி 20, அன்று மாநிலமாக்கப் பட்டது.