உத்தரப் பிரதேச அரசானது 2021 ஆம் ஆண்டிற்கான மின்னணுப் பஞ்சாயத்து (இ-பஞ்சாயத்து) புரஷ்கர் விருதினை வென்றுள்ளது.
இதனையடுத்து அசாம் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவை இரண்டாமிடத்தில் உள்ளன.
ஒடிசா மற்றும் தமிழ்நாடு ஆகியவை மூன்றாமிடத்தில் உள்ளன.
ஒவ்வொரு வருடமும் கிராமப் பஞ்சாயத்துகளில் அதிகளவில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வழிவகை செய்யும் மாநிலங்களுக்கு மத்திய கிராமப் பஞ்சாயத்து அமைச்சகம் இந்த விருதுகளை வழங்குகிறது.