மியான்மர் இராணுவப் புரட்சி 3.0
February 8 , 2021
1350 days
669
- மியான்மர் நாட்டின் இராணுவமானது பிப்ரவரி 1 அன்று புரட்சி செய்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.
- 1948 ஆம் ஆண்டில் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து அந்த நாடு விடுதலையடைந்த பின்பு அந்த நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த 3வது நிகழ்வு இதுவாகும்.
- 1962 ஆம் ஆண்டில், இராணுவமானது முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.
- அந்தப் புரட்சி 1974 ஆம் ஆண்டில் அந்நாட்டின் பெயரை ”பர்மிய ஒன்றிய சோஷலிசக் குடியரசு” என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரை மாற்றியது.
- அதன் பிறகு 1988 ஆம் ஆண்டில், மியான்மரின் ஆயுதப் படையானது அந்நாட்டில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
- இந்த முறை அது அந்நாட்டின் அதிகாரப்பூர்வ பெயரை ”பர்மிய ஒன்றியம்” என்று மாற்றியது.
- ஆனால் ஓராண்டு கழித்து, அப்போதைய ஆட்சியாளர் பர்மாவை மியான்மர் எனப் பெயர் மாற்றும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்.
- இது அந்நாட்டை ”மியான்மர் ஒன்றியம்” என்றாக்கியது.
Post Views:
669