TNPSC Thervupettagam

மியான்மர் நிலநடுக்கம் 2025

March 31 , 2025 2 days 59 0
  • மியான்மர் நாட்டில் 7.7 மற்றும் 6.4 ரிக்டர் அளவிலான இரண்டு நிலநடுக்கங்கள் உடன் அடுத்தடுத்து ஏற்பட்டன.
  • தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் ஆனது பேரிடர் பாதிப்பு பகுதியாக அறிவிக்கப் பட்டுள்ளது.
  • மியான்மரின் இராணுவ அரசாங்கம் ஆனது, அந்நாட்டின் ஆறு பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களில் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
  • மியான்மரின் மண்டலே பகுதியில் உள்ள 90 ஆண்டுகள் பழமையான அவா பாலம் ஐராவதி ஆற்றில் இடிந்து விழுந்தது.
  • முன்னதாக மியான்மரில், 1930 முதல் 1956 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் சகாயிங் பிளவு அருகே 7 அல்லது அதற்கு மேற்பட்ட ரிக்டர் அளவிலான ஆறு வலுவான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
  • 2016 ஆம் ஆண்டில் மத்திய மியான்மரில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆனது மூன்று பேரின் உயிரைப் பலி வாங்கியது.
  • மியான்மரில் பேரிடர் நிவாரணம், தேடல் மற்றும் மீட்பு உதவிகளை வழங்குவதை ஒரு நோக்கமாகக் கொண்ட அவசர நிவாரண நடவடிக்கையான 'ஆபரேஷன் பிரம்மா'வை இந்தியா தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்