74 ஆண்டுகளில் மியான்மர் மீதான முதல் தீர்மானத்தை ஐநா பாதுகாப்புக் குழுமம் ஏற்றுக் கொண்டது.
அது வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பதவி நீக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிக்கவும் இராணுவ ஆட்சியை வலியுறுத்துகிறது.
2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 1, ஆம் தேதியன்று சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து ராணுவம் ஆட்சியைப் பிடித்தது முதல் மியான்மர் நாடானது நெருக்கடியில் உள்ளது.
இந்தியாவுடன் சீனாவும் ரஷ்யாவும் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
மீதமுள்ள 12 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.