மியாவாகி காடு வளர்ப்பு முறையானது கேரளாவில் உள்ள அரசு அலுவலக வளாகங்கள், குடியிருப்பு வளாகங்கள், பள்ளி வளாகங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் செயல்படுத்தப்பட இருக்கின்றது.
மியாவாகி முறை சிறிய பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்வதோடு வளங்களுக்காக “போராட” வழிவகுக்கின்றது. இந்த முறையில் மரங்கள் கிட்டத்தட்ட 10 மடங்கு விரைவாக வளரும்.
இந்த முறையானது ஜப்பானில் தோன்றியது. இப்போது சென்னை உட்பட உலகின் பிற பகுதிகளிலும் அதிக அளவில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
கொல்லைப்புறப் பகுதிகளை சிறிய வகைக் காடுகளாக மாற்றுவதன் மூலம் நகர்ப்புற காடுகள் உருவாக்கம் என்ற கருத்தை இது எடுத்துக் காட்டுகின்றது.