TNPSC Thervupettagam

மிலாப் நடவடிக்கை – தில்லி காவல் துறை

July 9 , 2019 1840 days 610 0
  • காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்காக “மிலாப்” என்ற ஒரு நடவடிக்கையை தில்லி காவல்துறையின் குற்றவியல் பிரிவு நடத்தியுள்ளது.
  • இது காணாமல் போன 333 குழந்தைகளை தில்லியில் மீட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாழும் அந்தக் குழந்தைகளின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளது.
  • இந்தக் குழந்தைகள் 2019 ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காணாமல் போயுள்ளனர். அந்தக் குழந்தைகள் தில்லியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
  • தில்லி காவல் துறையின் ஆட்கடத்தல் தடுப்புப் பிரிவானது 2014 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்