TNPSC Thervupettagam
June 20 , 2021 1132 days 545 0
  • இந்தியத் தடகள  வீரரான மில்கா சிங் அவர்கள் தனது 91வது வயதில் காலமானார்.
  • இவர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் நான்கு முறை தங்கப் பதக்கம் வென்றதோடு, 1958 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகளில் சாம்பியன்சிப் பட்டம் வென்றவரும் ஆவார்.
  • மேலும் இவர் 1956 மற்றும் 1964 ஆகிய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்றவர் ஆவார்.
  • இவருக்கு 1959 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
  • இவர் பறக்கும் சீக்கியர்எனவும் அழைக்கப் பட்டார்.
  • இவர் 1929 நவம்பர் 20  ஆம் தேதியன்று அப்போதைய பிரிக்கப்படாத இந்தியாவில், தற்போதைய பாகிஸ்தானின் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள கோவிந்த்புரா என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார்.
  • இவர் 1947 ஆம் ஆண்டில் இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு குடியேறினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்