TNPSC Thervupettagam

மீன்பிடித் தொழிலாளர்களுக்கு எண்ணிம அடையாள அட்டைகள்

September 17 , 2024 11 days 70 0
  • மத்ஸ்ய கிசான் சம்ரிதி சா-யோஜனா (PM-MKSSY) திட்டம் ஆனது, பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனாவின் (PMMSY) துணைத் திட்டமாக தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்திய நாடு முழுவதும் உள்ள மீன்பிடித் தொழிலாளர்கள் மற்றும் மீன்பிடி மதிப்புச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பதிவேட்டை உருவாக்குவதன் மூலம் சுமார் மூன்று கோடி பங்குதாரர்களுக்கு எண்ணிம அடையாளங்களை வழங்கும்.
  • PMMSY திட்டமானது 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதியன்று தொடங்கப் பட்டது.
  • 2013-14 ஆம் ஆண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்த நாட்டின் மீன் உற்பத்தி 2023-24 ஆம் ஆண்டில் 175.45 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.
  • கடந்த நிதியாண்டில் சுமார் 60,000 கோடி ரூபாயாக இருந்த கடல் சார் உணவு ஏற்றுமதியை ஆண்டிற்கு 1 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்துவதற்காக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்